"விடுதலை புலிகள் தான் தமிழர்களை கொன்றார்கள்" என்று நாம் தமிழர் கட்சியின் முக்கிய தலைவர் பால் நியூமன் ஐ.நாவில் அறிக்கை தாக்கல் செய்யும் போது நாம் தமிழர் கட்சியின் துவக்கவிழா நடக்கவில்லை . எனவே சீமானுக்கும் அந்த அறிக்கைக்கும் சம்மந்தம் இல்லை என்று கூறுவது சுத்த அபத்தம்.. கட்டுரையாளரே கட்சி ஒன்றும் பொட்டி கடை கிடையாது. ஒரே நாளில் திடீரென்று கட்சியை ஆரமித்து விட முடியாது. அதற்கான கட்டமைப்பு ஏற்பாடுகளை பல மாதங்கள் முன்பே செய்ய வேண்டும். அதன் பிறகு தேர்தல் கமிஷனில் பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்த உடனேயே கட்சி சட்டப்படி செயல்பாட்டுக்கு வந்துவிடும் அதன் பிறகு தலைவர்கள் தங்களுக்கு வசதியான நாளில் துவக்க விழா நடத்தி கட்சியை ஆரமிப்பார்கள். இதுதான் நடைமுறை எதார்த்தம். கட்சி தொடங்கும் சட்ட நடைமுறைகளை அறிந்தவர்களுக்கு மூன்று மாதம் என்பது மிக சாதரண கால இடைவெளி என்று நன்கு தெரியும். அறிக்கை சமர்பித்த போது கட்சியின் துவக்கவிழா நடக்கவில்லை என்பதற்காக கட்சியே இல்லை, கட்சியிலேயே பால் நியுமன் இல்லையென்பது ஏமாற்று வேலை.
சரி ஒரு பேச்சுக்கு பால் நியூமன் நாம் தமிழர் கட்சி சார்பில் அறிக்கையை ஐ.நாவில் தாக்கல் செய்யவில்லை என்றே வைத்து கொள்வோம் இப்போது அவர் என்ன செய்கிறார் தெரியுமா? நாம் தமிழர் கட்சியின் மிக முக்கிய பொறுப்பில் இருக்கிறார். விடு தலை புலிகளுக்கு இப்படி ஒரு பச்சை துரோகத்தை செய்தவர் எப்படி நாம் தமிழர் கட்சியில் இணைந்தார். அது எப்படி என்றால் "விடுதலை புலிகள் தான் தமிழர்களை கொன்றார்கள்" என்று ஜநாவில் அவர் அறிக்கை தாக்கல் செய்ததே சீமானின் வழிகாட்டுதல்களின் படி தான். பால்நியுமன் தாக்கல் செய்த அறிக்கை கனடா வாழ் தமிழர்கள் மத்தியில் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு கனடா நாட்டு வானொலியில் விளக்கம் அளித்த பால்நியுமன் நாம் தமிழர் கட்சி சார்பிலேயே அந்த பேட்டியை கொடுத்தார். இது உலகமே அறிந்த ரகசியம். முழு பூசணியை சோற்றில் மறைக்காதீர். பால் நியுமன் நாம் தமிழர் கட்சியில் முக்கிய பொறுப்பில் இருக்கிறார் என்பதற்கு ஆதாரமாக சீமானின் பேஸ்புக் பக்கத்தில் வந்த பதிவு
இது மிக முக்கியமான ஆதாரம். இப்போது நான் இதை ஆதாரமாக பயன்படுத்த ஆரமித்துள்ளதால் எப்போது வேண்டுமானாலும் இந்த பதிவு சீமானின் பேஸ்புக் பக்கத்திலிருந்து நீக்கப்பட வாய்ப்பு இருக்கிறது. எனவே அந்த பதிவுக்கான ஸ்கிரீன் சாட்
கொஞ்சம் கூட வெட்கமே இல்லாமல் ”வெளிநாடு வாழ் தமிழர்களை சீமான் ஏமாற்றியதாக ஒருவரையாவது காட்ட முடியுமா” என்று சவடால் விடுகிறார் கட்டுரையாளர். உணர்ச்சி பொங்க சவடால் விட்டுவிட்டால் மக்கள் நம்பி விடுவார்கள் என்பது நாம் தமிழர் கட்சியினர் கையாளும் வழக்கமான உளவியல் உத்தி. கட்டுரையாளரே வெளிநாடு வாழ் தமிழர்களை ஏமாற்றிய நாம் தமிழர் கட்சியினர் 5 பேரை என்னால் காட்ட முடியும். சிங்கப்பூரில் விடுதலை புலிகளின் பெயரை பயன்படுத்தி முறைகேடாக பணம் வசூல் செய்த குற்றத்துக்காக நாம் தமிழர் கட்சியை சேர்ந்த 5 பேர் சிங்கப்பூர் போலீசால் கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்பட்டனர். அதற்கு ஆதாரமாக பத்திரிக்கைகளில் வந்த செய்தி
ராஜ்கிரண் ஒழுக்கம் இல்லாதவராம் அதனால் அவர் சொல்வது எல்லாம் பொய்யாம். உச்சகட்ட வெறுப்பில் கூட உங்களால் ராஜ்கிரன் மீது பொத்தாம் பொதுவாக தான் குறை சொல்ல முடியும். அந்த அளவுக்கு அவர் நல்லவர். ஆனால் ஒழுக்கத்தை பற்றி சீமானின் தம்பிகள் பேசுவதுதான் சரியான காமடி. உங்கள் அண்ணன் சீமான் ஒழுக்கம் விஜயலட்சுமி மூலமாக போலீஸ் ஸ்டேசன் வரை நாறியது. தனது குற்றச்சாட்டுக்கு ஆதாரமாக போட்டாவை கூட வெளியிட்டார் விஜயலட்சுமி. அப்படியானால் சீமான் சொல்வது எல்லாம் பொய்யா? சரி ராஜ்கிரண் சொல்வது பொய் என்றால் (சீமான் பிரபாகரனை சந்தித்தது பற்றி ) சீமான் ஏன் ஒரு கண்டனம் கூட தெரிவிக்கவில்லை? ஏன் கள்ள மௌனம் சாதிக்கிறார். "தலைவர் பிரபாகரன் எனக்கு நண்டு கறி பரிமாறினார்" என்று சீமான் சொல்வதை நீங்கள் வேண்டுமானால் நம்பலாம். அறிவுள்ளவன் எவனும் நம்ப மாட்டான்
புலிகளின் இணையதள ஊடக பிரிவு கடைசி வரை மிக தீவிரமாக இயங்கி வந்தது. குறிப்பாக புலிகளின் செய்தி தொடர்பாளர் அண்ணன் நடேசன் போரில் இறப்பதற்கு சில மணி நேரம் முன்பு கூட சேட்டிலைட் போன் மூலமாக சர்வதேச ஊடகங்களுடன் தொடர்பில் இருந்தார். போர் முடிந்த மறுநாள் கூட யுத்தம் பற்றிய செய்திகளை தங்களின் தளத்தில் வெளியிட்டனர் புலிகளின் வெளிநாடு வாழ் ஊடக பிரிவினர். அப்படிப்பட்ட புலிகள் மிக முக்கிய முடிவாக தங்களின் அடுத்த தலைவராக சீமானை யாரோ சந்தோஷ் என்பவர் மூலமாக அறிவித்தனர் என்பது நல்ல கமெடி. இந்த லட்டசணத்தில் நாம் தமிழர் ஆடியோவோடு சூசை அண்ணனின் பழைய ஆடியோவை ஒப்பிட வேறு சொல்கிறார். இது போலி விடியோக்களே தயாரிக்கும் காலம். போலி ஆடியோவை குழந்தைகள் கூட தயாரிக்கும்.
அட அறிவாளிகளா உண்மையான, வீரியமான நாடு கடந்த தமிழ் ஈழ அரசு அமையவில்லை என்று தான் நான் சொல்ல வந்தேன். ஜோக்கர் படத்தில் வரும் மாதிரி சும்மா நாலு பேர் சேர்ந்து கொண்டுநாங்கள் தான் நாடு கடந்த தமிழ் ஈழ அரசு என்றால் இவர்களை யார் ஏற்று கொள்வார்கள். ஒரு நாடாவது இவர்களை அங்கீகரித்து இருக்கிறதா? இதுவரை சிங்கள அரசுக்கு எதிராக உறுதியாக என்ன நடவடிக்கை எடுத்துள்ளனர் இவர்கள்.
இதைவிட பெரிய காமடி சீமானுக்கு கறி விருந்து வைத்தது இடிந்தகரை மக்களாம் . வைகுண்டராஜன் கிடையாதாம். அங்கு சரியான சாப்பாடு, தூக்கம் கூட இல்லாமல் உயிரை பணையம் வைத்து போராடுபவர்கள் இவருக்கு கறி விருந்து கொடுக்கிறார்களாம். சரி இவர்களின் கருத்துபடியே லட்சகணக்கான மக்கள் சீமானை பிரம்மாண்டமாக வரவேற்று கறிவிருந்து கொடுத்ததாகவே வைத்து கொள்வோம் அடுத்து நடந்த சட்ட மன்ற தேர்தலில் சீமானின் கட்சி இடிந்தகரையில் எவ்வளவு ஓட்டு வாங்கியது. அந்த பிரமாண்ட கூட்டத்தில் 5 சதவீகிதம் பேர் ஓட்டு போட்டிருந்தாலே டெபாசிட் வாங்கி இருக்கலாமே. ஏன் பூத்துக்கு 5 ஓட்டு வாங்குகிறார் சீமான். சீ
இதற்கு பரிகாரமாக சீமானின் சவடால் பேச்சுகளை ஆதாரமாக காட்டுகிறார் கட்டுரையாளர். வைகுண்டாரஜனிடம் விருந்து சாப்பிட்டுவிட்டு அவரையே கைது செய்வேன் என்று சீமான் சொல்வதை சீமானின் தும்பிகள் மாதிரி துப்புகெட்டவர்கள் தான் நம்புவார்கள். விட்டால் இடிந்தகரை மக்கள் தான் பாலும் பழமும் வாங்கி தந்து அண்ணனுக்கு முதலிரவுக்கு ஏற்பாடு செய்தனர் என்று கூட அடித்து விடுவார் போல கட்டுரையாளர்.
அது சரி கட்டுரையாளரே நீங்களே ஒப்புக்கொண்டது போல வைகுண்டராஜன் மகன் திருமணத்திற்கு சீமான் ஏன் போனார்? சீமானின் சவடால் பேச்சுகளின் படி "வைகுண்டராஜன் கைது செய்யப்பட வேண்டிய தாது மணல் கொள்ளையன் ஆயிற்றே". யோக்கியன் சீமானுக்கு கொள்ளையனோடு என்ன தொடர்பு? சீமானுக்கும் வைகுண்டராஜனுக்கும் உள்ள கள்ள கூட்டுக்கு இதுவே போதுமான ஆதாரம். வைகுண்டராஜனின் சேனலான நியுஸ் 7 க்கும் சீமானுக்கும் உள்ள தொடர்பு உலகமே அறிந்த ரகசியம். இன்னும் ராஜபக்சே இல்ல விழாவுக்கு சீமான் சென்று, உண்டு விழாவை சிறப்பிக்காதது மட்டும் தான் பாக்கி
50 லட்சும் ருபாய் காரில் வலம் வருபவர், பலமுறை மந்திரியாக இருந்தவரின் வீட்டு மாப்பிள்ளை சீமான். ஆனால் சீமானின் பெற்றோர் குடிசை வீட்டில் வாழ்கிறார்களாம். இதை படித்த உடன் சிரிப்பு வந்தால் சிரிப்பை அடக்கி கொள்ளுங்கள் . சிரித்தால் இனதுரோகி என்று முத்திரை குத்தப்படுவீர்கள் நாம் தமிழர் தும்பிகளால். இந்த லட்சணத்தில் சீமான் வீட்டில் சாப்பிடாத உதவி இயக்குனர்களே இல்லையாம். அரணையூர் எங்கே இருக்கு சென்னை எங்கே இருக்கிறது. சாப்பிடுவதற்காக சென்னையிலிருந்து அரணையூருக்கு வருகிறார்களா?
கட்டுரையாளரே பொய் சொன்னாலும் பொருந்துற மாதிரி சொல்ல வேண்டாமா?
விவசாய நிலங்களை காப்பாற்றுவதற்காக ரியல் எஸ்டேட் அதிபர்களோடு இணைந்து போராடினாராம் சீமான். "ஆடு நனையுதேன்னு ஓநாய் அழுத கதை மாதிரிதான்" இந்த கதை இருக்கிறது. அந்த போராட்டத்தை நடத்தியதே அகில இந்திய ரியல் எஸ்டேட் தரகர்களின் சங்கம் தான்.பணம் கொடுத்தால் இலங்கை தமிழர்களின் உரிமைகளை மீட்க ராஜபக்சே உடன் சேர்ந்து கூட போராட்டம் நடத்துவார் போல சீமான்.
ஜல்லிகட்டு போராட்டத்தில் மாணவர்கள் அடித்து விரட்டியதால் தான் சீமான் வெளியேறி தனியாக போராட்டம் நடத்தினார். அனைத்து பத்திரிக்கைகளிலும் இந்த
செய்தி வந்தது. உதாரணத்துக்கு எனது முதல் கட்டுரையில் உள்ள தினத்தந்தி லிங்கில் சென்று பார்க்கவும். சீமானின் கட்சிக்கு "நாம் தமிழர்" என்ற பெயரை கொடுத்ததே தினதந்திகாரன் தான். அவர்களின் தந்தை சிவந்தி ஆதித்தனாரின் கட்சி தான் நாம் தமிழர். எனவே அவர்கள் சீமான் மீது அவதூறு செய்ய துளியும் வாய்ப்பு இல்லை.
சீமானுக்கு சில கேள்விகளும் விளக்கங்களும்:
1.ஐநாவின் "விடுதலை புலிகள் தான் தமிழர்களை கொன்றார்கள்" என்று அறிக்கை தாக்கல் செய்தவர் சீமானின் கட்சிகாரர் என்பதை சீமானின் பேஸ்புக் பக்கத்தை வைத்தே நிரூபித்து விட்டேன். எனவே அவர் இனதுரோகி என்பது உறுதிபடுத்தபட்டு விட்டது
பால் நியூமன் நாம் தமிழர் கட்சிகாரர் என்பதை சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபித்து விட்டேன். இப்போது விவாதத்தை வேறு விதமாக திசை திருப்புவார்கள் சீமானின் தம்பிகள். அது எப்படி என்றால் பால் நியூமன் தனிபட்ட முறைமில் அறிக்கை தாக்கல் செய்தார். சீமானுக்கும் அந்த அறிக்கைக்கும் சம்மந்தமில்லை என்று புத்திசாலிதனமாக பேசுவதாக நினைத்து முட்டாள் தனமான வாதத்தை முன்வைப்பார்கள். அட அறிவாளிகளே எல்லா செயல்களையும் கட்சியின் தலைவர்களே செய்ய முடியாது. முக்கிய நபர்கள் மூலமாக தான் செய்ய முடியும். காமராஜர் பள்ளிகூடம் கட்டினார் என்று கூறுகிறோம். அதற்காக எல்லா பள்ளிகூடத்துக்கும் காமராஜர் மேஸ்திரி வேலையா பார்த்தார். இல்லை பள்ளிகூடத்தை கட்டியது மேஸ்திரிகள் தான் எனவே காமராஜருக்கும் அதற்கும் சம்மந்தமில்லை என்று கூறமுடியுமா? காமராஜரின் வழிகாட்டுதலின் படி திட்டங்கள் நிறைவேற்றப்பட்டது. அதே மாதிரிதான் இதுவும் சீமானின் வழிகாட்டுதலின் படி நடந்தது. ஒருவேளை சீமானுக்கு தெரியாமல் பால் நியூமன் இந்த துரோகத்தை செய்திருந்தால்கு றைந்தபட்சம் அவரை கட்சியைவிட்டு நீக்கி இருக்க வேண்டும். ஆனால் அவருக்கு இன்று வரை கட்சியில் மிக முக்கிய பதவி தந்து அழகு பார்கிறார் சீமான். சீமானின் இன துரோகத்துக்கு இந்த ஒரு ஆதாரம் போதாதா?
2. விஜயலட்சுமியின் கற்பழிப்பு புகார் கோர்ட்டில் எடுபடவில்லையாம். எனவே சீமான் நல்லவராம். அப்படி பார்த்தால் தமிழ்நாட்டில் மிக பெரிய உத்தமன் கருணாநிதி தான். சர்க்காரியா ஊழலிருந்து இதுவரை அவருக்கு எதிரான அத்தனை வழக்குகளிலும் அவர் விடுதலை அடைந்துவிட்டார். அதற்காக அவர் நல்லவர் ஆகிவிடுவாரா? அரசியல்வாதிகள் தங்களின் பணபலத்தால் சட்டத்திலிருந்து தப்புவது இந்தியாவில் சாதாரண விஷயம். போட்டோ ஆதாரதத்தையே விஜயலட்சுமி வெளியிட்டதால் சீமான் ஒழுக்கம் கெட்டவர் என்பது உறுதிபடுத்தப்பட்டுவிட்ட து.
3. சீமான் ஈழ விதவை பெண்ணை நான் திருமணம் செய்வேன் என்று பொது மேடையில் சவடால் விட்டது அனைவருக்கும் தெரியும. அதனால் தான் இந்த குற்றச்சாட்டை நேரடியாக மறுக்காமல் " சீமானை திருமணம் செய்ய யாராவது சம்மதிக்க வேண்டுமே" என்று பசப்புகிறார். இருபதாயிரம் விதவைகள் உள்ள ஈழத்தில் இவருக்கு பெண் கிடைக்காமல் போனது ஆச்சரியமாக இல்லையா? அதுசரி தேடினால் தானே கிடைக்கும்.
சீமான் விதவை பெண்ணை திருமணம் செய்யாதது கூட பரவாயில்லை சீமான் காதல் திருமணம் செய்ததாக நீங்கள் சொன்னதை தான் என்னால் ஜீரணிக்க முடியவில்லை. எத்தனை வயதில் ஐயா காதல் வரும்? அதுவும் எத்தனை வயது பெண்ணுடன். காசுக்காக கல்யாணம் பண்ணிவிட்டு பச்சையாக பொய் சொல்லி காதலை கலங்கப்படுத்தாதீர்கள்
இந்த கட்டுரை முழுக்க சீமானின் சவடால் பேச்சுகளை பெரிய சாதனை போலவும் ஆதாரங்களாகவும் கொடுத்து தள்ளியுள்ளார் கட்டுரையாளர். ஆனால் நான் கொடுத்துள்ள ஆதாரங்கள் அனைத்தும் வெவ்வேறு ஊடகங்களில் வந்தவை. ஒருவரின் செயல்பாடுகளை வைத்தே அவரை மதிப்பிட முடியும். வெறும் சவடால் பேச்சுகளை மட்டும் வைத்து அல்ல ஆனால் அவரின் நடவடிக்களோ அவரின் பேச்சுகளுக்கு நேர் எதிராக உள்ளது. யார் வேண்டுமானாலும் உத்தமன் மாதிரி உணர்ச்சி பொங்க பேசலாம். ஆனால் உத்தமனாக வாழ்வது தான் கடினம். ஊழல் அரசியல்வாதிகளை திட்டுவதாலேயே சீமான் நல்லவர் ஆகிவிட மாட்டார்.
எனது கட்டுரைக்கு யோசித்து பொய்களை அடுக்கி பதில் எழுத 5 மாத கால அவகாசம் தேவைபட்டிருக்கிறது சீமானின் தம்பிகளுக்கு. ஆனால் எனது கவனத்துக்கு வந்த ஒரு மணி நேரத்துக்குள் தனி ஆளாக பதில் கட்டுரை எழுதி முடித்துவிட்டேன். அனைத்தையும் விட பெரிய காமடி என்ன வென்றால் இதை மறுத்து கட்டாயம் வேறு ஒரு கட்டுரை வரும் என்று கட்டுயாளருக்கு நன்கு தெரியும். எனவே முதலிலேயே ஜகா வாங்கி விட்டார் கட்டுரையாளர். எனது கட்டுரையில் போன மாசம் வரை கமெண்ட் பாக்ஸில் கமெண்ட் போடும் ஆப்சன் இருந்தது. ஆனால் தொடர்ந்து படை எடுத்து வந்து நாம் தமிழர் கட்சியினர் சிறிதும் நாகரீகம் இன்றி வசை பாடியதால் தான் அதை மூட வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது. அதுசரி மேடையில் கெட்ட வார்த்தையில் நாகரீகமாக பேசும் தலைவரின் தொண்டர்கள் வேறு எப்படி பேசுவார்கள்.நாகரீகமாக எதிர் கருத்துக்களை பதிவு செய்தவர்களின் கருத்துக்கள் நீக்கப்படாமல் இன்னும் அப்படியே உள்ளது. ஆனால் அவரின் கட்டுரைக்கு மாற்று கருத்து போட்டால் உடனே நீக்கிவிடுகிறார் மாவீரனின் தம்பி. உண்மை யார் பக்கம் என்பதற்கு இதுவே சாட்சி. நாகரீகமாக பேசினால் நாம் தமிழர் கட்சியினரின் கமென்ட்களை அனுமதிக்க நான் தயார். அதேபோல் எனது கட்டுரையை அவர்களின் பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டு விவாதிக்க தயாரா என்று அவர்களுக்கு வெளிப்படையாகவே சவால் விடுகிறேன்