Wednesday 29 March 2017

பதிலுக்கு பதில் சீமான் தம்பிக்கு

"விடுதலை புலிகள் தான் தமிழர்களை கொன்றார்கள்" என்று நாம் தமிழர் கட்சியின் முக்கிய தலைவர் பால் நியூமன் ஐ.நாவில் அறிக்கை தாக்கல் செய்யும் போது நாம் தமிழர் கட்சியின்  துவக்கவிழா நடக்கவில்லை . எனவே சீமானுக்கும் அந்த அறிக்கைக்கும் சம்மந்தம் இல்லை என்று கூறுவது சுத்த அபத்தம்.. கட்டுரையாளரே கட்சி ஒன்றும் பொட்டி கடை கிடையாது. ஒரே நாளில் திடீரென்று கட்சியை ஆரமித்து விட முடியாது. அதற்கான கட்டமைப்பு ஏற்பாடுகளை பல மாதங்கள் முன்பே செய்ய வேண்டும். அதன் பிறகு தேர்தல் கமிஷனில் பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்த உடனேயே கட்சி சட்டப்படி செயல்பாட்டுக்கு வந்துவிடும் அதன் பிறகு தலைவர்கள் தங்களுக்கு வசதியான நாளில் துவக்க விழா நடத்தி கட்சியை ஆரமிப்பார்கள். இதுதான் நடைமுறை எதார்த்தம். கட்சி தொடங்கும் சட்‌ட நடைமுறைகளை அறிந்தவர்களுக்கு மூன்று மாதம் என்பது மிக சாதரண கால இடைவெளி என்று நன்கு தெரியும்.  அறிக்கை சமர்பித்த போது கட்சியின் துவக்கவிழா நடக்கவில்லை என்பதற்காக கட்சியே இல்லை, கட்சியிலேயே  பால் நியுமன் இல்லையென்பது ஏமாற்று வேலை.
                                   சரி ஒரு பேச்சுக்கு பால் நியூமன் நாம் தமிழர் கட்சி சார்பில் அறிக்கையை ஐ.நாவில் தாக்கல் செய்யவில்லை என்றே வைத்து கொள்வோம் இப்போது அவர் என்ன செய்கிறார் தெரியுமா? நாம் தமிழர் கட்சியின் மிக முக்கிய பொறுப்பில் இருக்கிறார். விடுதலை புலிகளுக்கு இப்படி ஒரு பச்ச‌ை‌ துரோகத்தை செய்தவர் எப்படி நாம் தமிழர் கட்சியில் இணைந்தார். அது எப்படி என்றால் "விடுதலை புலிகள் தான் தமிழர்களை கொன்றார்கள்" என்று ஜநாவில் அவர் அறிக்கை தாக்கல் செய்ததே சீமானின் வழிகாட்டுதல்களின் படி தான். பால்நியுமன் தாக்கல் ‌செய்த அறிக்கை கனடா வாழ் தமிழர்கள் மத்தியில் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு கனடா நாட்டு வானொலியில் விளக்கம் அளித்த பால்நியுமன் நாம் தமிழர் கட்சி சார்பிலேயே அந்த பேட்‌டியை கொடுத்தார். இது உலகமே அறிந்த ரகசியம். முழு பூசணியை சோற்றில் மறைக்காதீர். பால் நியுமன் நாம் தமிழர் கட்சியில் முக்கிய பொறுப்பில் இருக்கிறார் என்பதற்கு ஆதாரமாக சீமானின் பேஸ்புக் பக்கத்தில் வந்த பதிவு


                               இது மிக முக்கியமான ஆதாரம். இப்போது நான் இதை ஆதாரமாக பயன்படுத்த ஆரமித்துள்ளதால் எப்போது வேண்டுமானாலும் இந்த பதிவு சீமானின் பேஸ்புக் பக்கத்திலிருந்து நீக்கப்பட வாய்ப்பு இருக்கிறது. எனவே அந்த பதிவுக்கான ஸ்கிரீன் சாட்
 

                                 கொஞ்சம் கூட வெட்கமே இல்லாமல் ”வெளிநாடு வாழ் தமிழர்களை சீமான் ஏமாற்றியதாக ஒருவரையாவது காட்ட முடியுமா” என்று சவடால் விடுகிறார் கட்டுரையாளர். உணர்ச்சி பொங்க சவடால் விட்டுவிட்டால் மக்கள் நம்பி விடுவார்கள் என்பது நாம் தமிழர் கட்சியினர் கையாளும் வழக்கமான உளவியல் உத்தி. கட்டுரையாளரே வெளிநாடு வாழ் தமிழர்களை ஏமாற்றிய நாம் தமிழர் கட்சியினர் 5 பேரை என்னால் காட்ட முடியும். சிங்கப்பூரில் விடுதலை புலிகளின் பெயரை பயன்படுத்தி முறைகேடாக பணம் வசூல் செய்த குற்றத்துக்காக நாம் தமிழர் கட்சியை சேர்ந்த 5 பேர் சிங்கப்பூர் போலீசால் கைது ச‌ெ‌ய்யப்பட்டு நாடு கடத்தப்பட்டனர். அதற்கு ஆதாரமாக பத்திரிக்கைகளில் வந்த செய்தி 
                                
                                         ராஜ்கிரண் ஒழுக்கம் இல்லாதவராம் அதனால் அவர் சொல்வது எல்லாம் பொய்யாம். உச்சகட்ட வெறுப்பில் கூட உங்களால் ராஜ்கிரன் மீது பொத்தாம் பொதுவாக தான் குறை சொல்ல முடியும். அந்த அளவுக்கு அவர் நல்லவர்.  ஆனால் ஒழுக்கத்தை பற்றி சீமானின் தம்பிகள் பேசுவதுதான் சரியான காமடி. உங்கள் அண்ணன் சீமான் ஒழுக்கம் விஜயலட்சுமி மூலமாக போலீஸ் ஸ்டேசன் வரை நாறியது. தனது குற்றச்சாட்டுக்கு ஆதாரமாக போட்டாவை கூட வெளியிட்டார் விஜயலட்சுமி. அப்படியானால் சீமான் சொல்வது எல்லாம் பொய்யா? சரி ராஜ்கிரண் சொல்வது பொய் என்றால் (சீமான் பிரபாகரனை சந்தித்தது பற்றி ) சீமான் ஏன் ஒரு கண்டனம் கூட தெரிவிக்கவில்லை? ஏன் கள்ள மௌனம் சாதிக்கிறார். "தலைவர் பிரபாகரன் எனக்கு நண்டு கறி பரிமாறினார்"  என்று சீமான் சொல்வதை நீங்கள் வேண்டுமானால் நம்பலாம். அறிவுள்ளவன் எவனும் நம்ப மாட்டான்

                                      புலிகளின் இணையதள ஊடக பிரிவு கடைசி வரை மிக தீவிரமாக இயங்கி வந்தது. குறிப்பாக புலிகளின் செய்தி தொடர்பாளர் அண்ணன் நடேசன்  போரில் இறப்பதற்கு சில மணி நேரம் முன்பு கூட சேட்‌டிலைட் போன் மூலமாக சர்வதேச ஊடகங்களுடன் தொடர்பில் இருந்தார். போர் முடிந்த  மறுநாள் கூட யுத்தம் பற்றிய செய்திகளை தங்களின் தளத்தில் வெளியிட்டனர்  புலிகளின் வெளிநாடு வாழ் ஊடக பிரிவினர். அப்படிப்பட்ட புலிகள் மிக முக்கிய முடிவாக தங்களின் அடுத்த தலைவராக சீமானை யாரோ சந்தோஷ் என்பவர் மூலமாக அறிவித்தனர் என்பது நல்ல கமெடி. இந்த லட்டசணத்தில் நாம் தமிழர் ‌ஆடியோவோடு சூசை அண்ணனின் பழைய ஆடியோவை ஒப்பிட வேறு சொல்கிறார். இது போலி விடியோக்களே தயாரிக்கும் காலம். போலி ஆடியோவை குழந்தைகள் கூட தயாரிக்கும். 

                                  
                                  அட அறிவாளிகளா உண்மையான, வீரியமான நாடு கடந்த தமிழ் ஈழ அரசு அமையவில்லை என்று தான் நான் சொல்ல வந்தேன். ஜோக்கர் படத்தில் வரும் மாதிரி சும்மா நாலு பேர் சேர்ந்து கொண்டுநாங்கள் தான் நாடு கடந்த தமிழ் ஈழ அரசு என்றால் இவர்களை யார் ஏற்று கொள்வார்கள். ஒரு நாடாவது இவர்களை அங்கீகரித்து இருக்கிறதா? இதுவரை சிங்கள அரசுக்கு எதிராக உறுதியாக என்ன நடவடிக்கை எடுத்துள்ளனர் இவர்கள். 
                                    இதைவிட பெரிய காமடி  சீமானுக்கு கறி விருந்து வைத்தது இடிந்தகரை மக்களாம் . வ‌ை‌குண்டராஜன் கிடையாதாம். அங்கு சரியான சாப்பாடு, தூக்கம் கூட இல்லாமல் உயிரை பணையம் வைத்து போராடுபவர்கள் இவருக்கு கறி விருந்து கொடுக்கிறார்களாம். சரி இவர்களின் கருத்துபடியே லட்சகணக்கான மக்கள் சீமானை பிரம்மாண்டமாக வரவேற்று கறிவிருந்து கொடுத்ததாகவே வைத்து  கொள்வோம் அடுத்து நடந்த சட்ட மன்ற தேர்தலில் சீமானின் கட்சி இடிந்தகரையில் எவ்வளவு ஓட்டு வாங்கியது. அந்த பிரமாண்ட கூட்டத்தில் 5 சதவீகிதம் பேர் ஓட்டு போட்டிருந்தாலே டெபாசிட் வாங்கி இருக்கலாமே. ஏன் பூத்துக்கு 5 ஓட்டு வாங்குகிறார் சீமான்.  சீமானுக்கு வைகுண்டராஜன் தான் கறி விருந்து கொடுத்தார். இதை எனது முதல் கட்டுரையில் உள்ள கம்யூனிச தளமான வினவில் தெளிவாக கூறியிருக்கின்றனர். அதை மீண்டும் இங்கு பகிர்ந்து கொள்கிறேன்

                          இதற்கு பரிகாரமாக  சீமானின் சவடால் பேச்சுகளை ஆதாரமாக காட்டுகிறார் கட்டுரையாளர். வைகுண்டாரஜனிடம் விருந்து சாப்பிட்டுவிட்டு அவரையே கைது செய்வேன் என்று சீமான் சொல்வதை சீமானின் தும்பிகள் மாதிரி துப்புகெட்டவர்கள் தான் நம்புவார்கள். விட்டால் இடிந்தகரை மக்கள் தான் பாலும் ப‌ழமும் வாங்கி தந்து  அண்ணனுக்கு முதலிரவுக்கு ஏற்பாடு செய்தனர் என்று கூட அடித்து விடுவார் போல கட்டுரையாளர்.                                          
                              அது சரி கட்டுரையாளரே நீங்களே ஒப்புக்கொண்டது போல வைகுண்டராஜன் மகன் திருமணத்திற்கு சீமான் ஏன் போனார்? சீமானின் சவடால் பேச்சுகளின் படி "வைகுண்டராஜன் கைது செய்யப்பட வேண்டிய தாது மணல் கொள்ளையன் ஆயிற்றே". யோக்கியன் சீமா‌னுக்கு கொள்ளையனோடு என்ன தொடர்பு?  சீமானுக்கும் வைகுண்டராஜனுக்கும் உள்ள கள்ள கூட்டுக்கு இதுவே போதுமான ஆதாரம். வைகுண்டராஜனின்  சேனலான நியுஸ் 7 க்கும் சீமானுக்கும் உள்ள தொடர்பு உலகமே அறிந்த ரகசியம். இன்னும் ராஜபக்சே இல்ல விழாவுக்கு சீமான் சென்று, உண்டு விழாவை  சிறப்பிக்காதது மட்டும் தான் பாக்கி   
                                      50 லட்சும் ருபாய் காரில் வலம் வருபவர், பலமுறை மந்திரியாக இருந்தவரின் வீட்டு மாப்பிள்ளை சீமான். ஆனால் சீமானின் பெற்றோர் குடிசை வீட்டில் வாழ்கிறார்களாம். இதை படித்த உடன் சிரிப்பு வந்தால் சிரிப்பை அடக்கி கொள்ளுங்கள் . சிரித்தால்  இனதுரோகி என்று முத்திரை குத்தப்படுவீர்கள் நாம் தமிழர் தும்பிகளால். இந்த லட்சணத்தில் சீமான் வீட்டில் சாப்பிடாத உதவி இயக்குனர்களே இல்லையாம். அரணையூர் எங்கே இருக்கு சென்னை எங்கே இருக்கிறது. சாப்பிடுவதற்காக சென்னையிலிருந்து அரணையூருக்கு வருகிறார்களா?
கட்டுரையாளரே பொய் சொன்னாலும் பொருந்துற மாதிரி சொல்ல வேண்டாமா?
                                       விவசாய நிலங்களை காப்பாற்றுவதற்காக ரியல் எஸ்டேட் அதிபர்களோடு இணைந்து போராடினாராம் சீமான். "ஆடு நனையுதேன்னு ஓநாய் அழுத கதை மாதிரிதான்" இந்த கதை இருக்கிறது. அந்த போராட்டத்தை நடத்தியதே அகில இந்திய ரியல் எஸ்டேட் தரகர்களின் சங்கம் தான்.பணம் கொடுத்தால் இலங்கை தமிழர்களின் உரிமைகளை மீட்க ராஜபக்சே உடன் சேர்ந்து கூட  போராட்டம் நடத்துவார் போல சீமான்.
                         ஜல்லிகட்டு போராட்டத்தில் மாணவர்கள் அடித்து விரட்டியதால் தான் சீமான் வெளியேறி தனியாக போராட்டம் நடத்தினார். அனைத்து பத்திரிக்கைகளிலும் இந்த
செய்தி வந்தது. உதாரணத்துக்கு எனது முதல் கட்டுரையில் உள்ள தினத்தந்தி லிங்கில் சென்று பார்க்கவும். சீமானின் கட்சிக்கு "நாம் தமிழர்" என்ற பெயரை  கொடுத்ததே தினதந்திகாரன் தான். அவர்களின் தந்தை சிவந்தி ஆதித்தனாரின் கட்சி தான் நாம் தமிழர். எனவே அவர்கள் சீமான் மீது அவதூறு செய்ய துளியும் வாய்ப்பு இல்லை.
                                   
                                        
சீமானுக்கு சில கேள்விகளும் விளக்கங்களும்:
                           1.ஐநாவின் "விடுதலை புலிகள் தான் தமிழர்களை கொன்றார்கள்" என்று அறிக்கை தாக்கல் செய்தவர் சீமானின் கட்சிகாரர் என்பதை சீமானின் பேஸ்புக் பக்கத்தை வைத்தே நிரூபித்து விட்டேன். எனவே அவர் இனதுரோகி என்பது உறுதிபடுத்தபட்டு விட்டது
                         பால் நியூமன் நாம் தமிழர் கட்சிகாரர் என்பதை சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபித்து விட்டேன். இப்போது விவாதத்தை வேறு விதமாக திசை திருப்புவார்கள் சீமானின் தம்பிகள். அது எப்படி என்றால் பால் நியூமன் தனிபட்ட முறைமில் அறிக்கை தாக்கல் செய்தார். சீமானுக்கும் அந்த அறிக்கைக்கும் சம்மந்தமில்லை என்று புத்திசாலிதனமாக பேசுவதாக நினைத்து முட்டாள் தனமான வாதத்தை முன்வைப்பார்கள். அட அறிவாளிகளே எல்லா செயல்களையும் கட்சியின் தலைவர்களே செய்ய முடியாது. முக்கிய நபர்கள் மூலமாக தான் செய்ய முடியும். காமராஜர் பள்ளிகூடம் கட்டினார் என்று கூறுகிறோம். அதற்காக எல்லா பள்ளிகூடத்துக்கும் காமராஜர் மேஸ்திரி வேலையா பார்த்தார். இல்லை பள்ளிகூடத்தை கட்டியது மேஸ்திரிகள் தான் எனவே காமராஜருக்கும் அதற்கும் சம்மந்தமில்லை என்று கூறமுடியுமா? காமராஜரின் வழிகாட்டுதலின் படி திட்டங்கள் நிறைவேற்றப்பட்டது. அதே மாதிரிதான் இதுவும் சீமானின் வழிகாட்டுதலின் படி நடந்தது. ஒருவேளை சீமானுக்கு தெரியாமல் பால் நியூமன் இந்த துரோகத்தை செய்திருந்தால்கு றைந்தபட்சம் அவரை கட்சியைவிட்டு நீக்கி இருக்க வேண்டும். ஆனால் அவருக்கு இன்று வரை கட்சியில் மிக முக்கிய பதவி தந்து அழகு பார்கிறார் சீமான். சீமானின் இன துரோகத்துக்கு இந்த ஒரு ஆதாரம் போதாதா?
2. விஜயலட்சுமியின் கற்பழிப்பு புகார் கோர்ட்டில் எடுபடவில்லையாம். எனவே சீமான் நல்லவராம். அப்படி பார்த்தால் தமிழ்நாட்டில் மிக பெரிய உத்தமன் கருணாநிதி தான். சர்க்காரியா ஊழலிருந்து இதுவரை அவருக்கு எதிரான அத்தனை வழக்குகளிலும் அவர் விடுதலை அடைந்துவிட்டார். அதற்காக அவர் நல்லவர் ஆகிவிடுவாரா? அரசியல்வாதிகள் தங்களின் பணபலத்தால் சட்டத்திலிருந்து தப்புவது இந்தியாவில் சாதாரண விஷயம். போட்டோ ஆதாரதத்தையே விஜயலட்சுமி வெளியிட்டதால் சீமான் ஒழுக்கம் கெட்டவர் என்பது உறுதிபடுத்தப்பட்டுவிட்டது.
                                    3. சீமான் ஈழ விதவை பெண்ணை நான் திருமணம் செய்வேன் என்று பொது மேடையில் சவடால் விட்டது அனைவருக்கும் தெரியும. அதனால் தான் இந்த குற்றச்சாட்டை நேரடியாக மறுக்காமல் " சீமானை திருமணம் செய்ய யாராவது சம்மதிக்க வேண்டுமே" என்று பசப்புகிறார். இருபதாயிரம் விதவைகள் உள்ள ஈழத்தில் இவருக்கு பெண் கிடைக்காமல் போனது ஆச்சரியமாக இல்லையா? அதுசரி தேடினால் தானே கிடைக்கும்.
                                        சீமான் விதவை பெண்ணை திருமணம் செய்யாதது கூட பரவாயில்லை சீமான் காதல் திருமணம் செய்ததாக நீங்கள் சொன்னதை தான் என்னால் ஜீரணிக்க முடியவில்லை. எத்தனை வயதில் ஐயா காதல் வரும்? அதுவும் எத்தனை வயது பெண்ணுடன். காசுக்காக கல்யாணம் பண்ணிவிட்டு பச்சையாக பொய் சொல்லி காதலை கலங்கப்படுத்தாதீர்கள்
                           
                                     இந்த கட்டுரை முழுக்க சீமானின் சவடால் பேச்சுகளை பெரிய சாதனை போலவும் ஆதாரங்களாகவும் கொடுத்து தள்ளியுள்ளார் கட்டுரையாளர்.  ஆனால் நான் கொடுத்துள்ள ஆதாரங்கள் அனைத்தும் வெவ்வேறு ஊடகங்களில் வந்தவை.  ஒருவரின் செயல்பாடுகளை வைத்தே அவரை மதிப்பிட முடியும். வெறும் சவடால் பேச்சுகளை மட்டும் வைத்து அல்ல ஆனால் அவரின் நடவடிக்களோ அவரின் பேச்சுகளுக்கு நேர் எதிராக உள்ளது. யார் வேண்டுமானாலும் உத்தமன் மாதிரி உணர்ச்சி பொங்க பேசலாம். ஆனால் உத்தமனாக வாழ்வது தான் கடினம். ஊழல் அரசியல்வாதிகளை திட்டுவதாலேயே சீமான் நல்லவர் ஆகிவிட மாட்டார். 

                                       எனது கட்டுரைக்கு யோசித்து பொய்களை அடுக்கி பதில் எழுத 5 மாத கால அவகாசம் தேவைபட்டிருக்கிறது சீமானின் தம்பிகளுக்கு. ஆனால் எனது கவனத்துக்கு வந்த ஒரு மணி நேரத்துக்குள் தனி ஆளாக பதில் கட்டுரை எழுதி முடித்துவிட்டேன். அனைத்தையும் விட பெரிய காமடி என்ன வென்றால் இதை மறுத்து கட்டாயம் வேறு ஒரு கட்டுரை வரும் என்று கட்டுயாளருக்கு நன்கு தெரியும். எனவே முதலிலேயே ஜகா வாங்கி விட்டார் கட்டுரையாளர். எனது கட்டுரையில் போன மாசம் வரை கமெண்ட் பாக்ஸில் கமெண்ட் போடும் ஆப்சன் இருந்தது. ஆனால் தொடர்ந்து படை எடுத்து வந்து  நாம் தமிழர் கட்சியினர் சிறிதும் நாகரீகம் இன்றி வசை பாடியதால் தான் அதை மூட வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது. அதுசரி மேடையில் கெட்ட வார்த்தையில் நாகரீகமாக பேசும் தலைவரின் தொண்டர்கள் வேறு எப்படி பேசுவார்கள்.நாகரீகமாக எதிர் கருத்துக்களை பதிவு செய்தவர்களின் கருத்துக்கள் நீக்கப்படாமல் இன்னும் அப்படியே உள்ளது. ஆனால் அவரின் கட்டுரைக்கு மாற்று கருத்து போட்டால் உடனே நீக்கிவிடுகிறார் மாவீரனின் தம்பி. உண்மை யார் பக்கம் என்பதற்கு இதுவே சாட்சி. நாகரீகமாக பேசினால் நாம் தமிழர் கட்சியினரின் கமென்ட்களை அனுமதிக்க நான் தயார். அதேபோல் எனது கட்டுரையை அவர்களின் பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டு விவாதிக்க தயாரா என்று அவர்களுக்கு வெளிப்படையாகவே சவால் விடுகிறேன் 

Tuesday 2 August 2016

சீமான் உண்மை முகம்

                                          நான் சீமானின் முன்னாள் ஆதரவாளன். அவரது உணர்சிகளை தூண்டும் பேச்சாலும் விடுதலைபுலிகளின் ஆதரவு நிலைப்பாட்டாலும் அவரால் கவரப்பட்டேன். பிறகு அவ‌ரை நெருக்கமாக கவனித்தபோது பல அதிர்ச்சியான உண்மைகள் தெரியவந்தன. எனது அனுபவத்தின் அடிப்படையில் அவரை பற்றி தெரிந்து கொண்ட விசயங்களை இங்கே தகுந்த ஆதாரங்களுடன் பகிர்ந்து கொண்டு உள்ளேன். இது தமிழ்நாட்டில் உள்ள பெரிய ஊடகங்களில் வெவ்வேறு காலகட்டங்களில் வந்த செய்திகளை ஆதாரமாக கொண்டு, வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள். இதை மறுப்பவர்களிடம் நேர்மை இருந்தால் பதிலுக்கு வேறு ஆதரங்களை கொடுக்க வேண்டும். 

சீமான் புலிகளுக்கு செய்த துரோகங்கள்:
                 ஈழப்படுகொலைக்கு பின்னர் ஐநாவின் டப்லின் தீர்பாயத்தில் நடந்த விசாரணை மிக முக்கியமானது.  அதில் நாம்  தமிழர் கட்சியின் சார்பாக 41 பக்க அறிக்கையை சமர்பித்துள்ளனர். அதில் LTTE யினர்  போர்குற்றம் புரிந்தனர் என்று கூறியுள்ளார்  சீமான். அந்த அறிக்கையில் 40 ஆவது பக்கத்தில்,
                                        "விடுதலைப் புலிகள் ஆண், பெண், குழந்தைகள் என்ற பேதமின்றி அனைவரையும் புலிகள் போரில் ஈடுபடுத்தினர், குழந்தைகளை LTTE யினர் பெற்றோரிடம் இருந்து பிடிங்கி, தங்களின் படைகளில் இணைத்துக் கொண்டனர். திருமணமான பெண்களுக்கு கட்டாய கருக்கலைப்பை LTTE யினர் செய்ததனர், மேலும் போரின் இறுதிக் கட்டத்தில் LTTE யினர் அப்பாவி மக்களை கேடயமாக பயன்படுத்தியதாகவும், தப்பிக்க பார்த்த தமிழர்களை சுட்டு
கொன்றனர்" என்று சிங்கள அரசாங்கம் பிரபாகரன் மீது கூறும் த்தனை குற்றச்சாட்டுகளையும் கூறியுள்ளார் சீமான். நேரடியாக LTTE யினர் தான் போர் குற்றவாளிகள் என்று ஐ.நா விசாரணை குழுவில் வாக்குமூலம்அளித்துவிட்டு, இங்கு வந்து பிரபாகரனின் புகழ் பாடி கொண்டு இருக்கிறார் சீமான். 
                                      சீமானின் இந்த துரோகத்தை கண்டித்துதான் சீமான் கலந்துகொண்ட"முள்ளிவாய்க்கால் முடிவல்ல" என்ற புத்தக வெளியீட்டு விழாாவில் கலந்து கொள்ளாமல் கவிஞர் காசிஆனந்தன், த.வெள்ளையன், இயக்குனர் வ.கெளதமன்
ஆகியோர் புறக்கணித்தனர். இவர்கள் தீவிரமான தமிழ் உணவாளர்கள் மற்றும் ஈழ ஆதரவாளர்கள் என்பது அனைவரும் அறிந்ததே.

சீமானின் துரோகத்துக்கு  இரண்டு ஆதாரங்கள்:
                      1. விகடன் என்பது விடுதலைப்புலிகளுக்கு ஆதரவான பத்திரிக்கை. ஈழ இறுதிபோர் உச்சத்தில் இருந்த போது விகடன் தான் புலிகளுக்கு ஆதரவாகவும், இந்திய அரசுக்கு எதிராகவும்  உண்மை செய்திகளை தைரியமாக வெளியிட்டது அனைவரும் அறிந்தது.
இப்போது கூட சீமானின் பேட்டிகளை அதிகமாக வெளியிட கூடிய வெகுஜென பத்திரிக்கை விகடன் தான். அப்படிப்பட்ட பத்திரிக்கையிலேயே விடுதலை புலிகளுக்கு எதிராக ஐநாவில் 
சீமான் சமர்பித்த அறிக்கை  பற்றி மிக கடுமையான குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது. ஒருவேளை இது பொய் என்றால் சீமான் இதற்கு மறுப்பு தெரிவித்து இருப்பார். ஏனெனில் விகடன் தமிழ்நாட்டில் மிக அதிக அளவில் விற்பனையாகும் வார இதழ். ஆனால் சீமான் இதை பற்றி வாயே திறக்காமல் கள்ள மௌனம் சாதிக்கிறார். இதுவே அவரின் மீதான குற்றச்சாட்டை உறுதிபடுத்துகிறது. விகடன் வெளியிட்ட செய்திக்கான லிங்கை கீழே கொடுத்து உள்ளேன்
http://www.vikatan.com/news/tamilnadu/64271-students-forum-turn-against-seeman.art
                                         
 2.தேவர் சமூகத்து மக்களால் நடதப்படும் பேஸ்புக் பக்கத்திலும் சீமான் ஐநாவில் சமர்பித்த அறிக்கைக்கு எதிராக சீமானுக்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. தேவர் ஜாதி மக்கள் என்ன வேற்று மொழிகாரர்களா? அவர்கள் சீமான் மேல் ஏன் அவதூறு பரப்ப வேண்டும்? அதற்கான இணைப்பு கீழே
https://m.facebook.com/thevarvamsamfilmsindia/posts/1614333865554009:0


                                            சீமான் இப்படி பொய் சொல்ல காரணம் தாம் தான் விடுதலை புலிகளின் பிரதிநிதி என்று கூறி வெளிநாடுவாழ் தமிழர்களிடம் பணம் பறிக்க தான். சிங்கப்பூரில் விடுதலை புலிகளின் பெயரை பயன்படுத்தி முறைகேடாக பணம் வசூல் செய்த குற்றத்துக்காக நாம் தமிழர் கட்சியை சேர்ந்த 5 பேர் சிங்கப்பூர் போலீசால் கைது ச‌ெ‌ய்யப்பட்டு நாடு கடத்தப்பட்டனர். அதற்கு ஆதாரமாக பத்திரிக்கைகளில் வந்த செய்தி 
https://i0.wp.com/www.pathivu.com/app/uploads/2016/08/se.jpg
                                                                                
சீமானின் இலங்கை பயண பொய்கள்:
                   சீமான் இலங்கைக்கு சென்றது திரைப்படம் எடுப்பது தொடர்பான பயிற்சி கொடுக்க தான். இதை நடிகர்  ராஜ்கிரன் ஒரு பேட்டியில் பேச்சுவாக்கில் கூறிவிட்டார். சீமான் தலைவர் பிரபாகரனை சந்தித்தது 5 நிமிடங்களுக்குள் தான். பாரதிராஜா, மகேந்திரன் போன்றோர் எற்கனவே இதேபோல் சென்று தலைவருடன் புகைப்படம் எடுத்துள்ளனர். அதேமாதிரி தான் ஒரு இயக்குனர் என்ற அடிப்படையில் சீமானோடு ஒரே ஒரு புகைப்படம் எடுத்துள்ளார் தலைவர்.அதன் பிறகு பிரபாகரன் எந்த இடத்திலும், எந்த நேரத்திலும் சீமான்
என்ற பெயரை உச்சரிக்கவே இல்லை. ஆனால் சீமானோ அவரோடு எடுத்த ஒரே ஒரு புகைப்படத்தை வைத்துக்கொண்டு, என்னமோ இவர் தான் பிரபாகரனின் வலது கையாக
செயல்பட்டது போலவும், பிரபாகரன் என்னிடம் "அதை கூறினார், இதை கூறினார்" என்று பொய் சொல்லி கொண்டு இருக்கிறார். அதுகூட‌ பரவாயில்லை, "பிரபாகரன் எனக்கு இலையில் கடல் நண்டு பரிமாறினார்" என்று எல்லாம் பேட்டி கொடுத்துள்ளார். அப்படி உண்மையிலேயே பிரபாகரனுக்கு நெருக்கமானவராக இருந்திருந்தால், "இவர் இப்போது சொல்லும் விசயங்களில் ஒன்றை கூட ஏன் தலைவர் உயிரோடு இருக்கும் போது மேடைகளில் கூறவில்லை?" ஏனெனில் உண்மையை பிரபாகரன் வெளியிட்டு விடுவார் என்ற பயம் தான் காரணம்
                                              ராஜ்கிரனுக்கு சீமானுடன் எந்தவித கசப்பும் கிடையாது. அவர் திரைதுரையில் ஒழுக்கமானவர் என்று  பெயர் எடுத்தவர். தமிழ் சினிமாவில் உள்ள ஒருவர் கூட ராஜ்கிரனை பற்றி சிறிய குறைகூட சொல்ல மாட்டர்கள். ராஜ்கிரன் எந்த கட்சியிலும் உறுப்பினரும் கிடையாது. நந்தா படத்தில் பிரச்சனை வரும் என்று சிவாஜிகணேசன் நடிக்க மறுத்த கதாபாத்திரத்தில் இலங்கை தமிழர்கள் மீது உள்ள பாசத்தால் தைரியமாக நடித்தவர் ராஜ்கிரண். எனவே அவர் பொய்யோ, அவதூறோ செய்ய வேண்டிய அவசியம் இல்லை. அவர் சீமானின் இலங்கை பயணம் பற்றி கொடுத்த பேட்டி கீழே உள்ளது
https://www.youtube.com/watch?v=YKAp_QIDK2o
                                    இதுமட்டும் அல்லாது புலிகளின் தளபதி மரியாதைகுறிய அண்ணன் சூசை அவர்கள் சீமானை பற்றி பேசுவது போல போலியான ஆடியோவை யுடிப்பில் வெளியிட்டு உள்ளார் சீமான் . அப்படி அவர் உண்மையாக சீமானை பற்றி  பேசி இருந்தால், அதை புலிகள் அவர்களின் அதிகாரபுர்வ வானொலியிலேயே வெளியிடுவார்கள்.இதுதான் விடுதலை புலிகளின் மரபு.  அனைவரும் இறந்தபின், தான் சொல்லும் பொய்யை மறுக்க யாரும் உயிரோடு இல்லை என்ற தைரியத்தில் இப்படி ஒரு கீழ்த்தரமான செயலில் ஈடுபடுவது நியாயமா சீமானே? அரசியல் விமர்சகர்கள் உங்களை "பிணம்திண்ணி" என்று அழைப்பதில் என்ன தவறு இருக்கிறது சீமான்
சீமானும் சிங்கர்களும்:
                                     சீமானுக்கு சிங்களர்களோடு பல காலமாகவே நெருங்கிய தொடர்பு
உள்ளது. அதன் காரணமாக தான் தனது தம்பி படத்தில் ஒரு சிங்கள பெண்ணை(பூஜா) ஹீரோயினாக நடிக்க செய்தார் சீமான். ராஜபக்சேவின்
சொந்தங்கள் தயாரித்த கத்தி படத்தை தமிழகத்தில் திரையிட தமிழ் உணர்வாளர்கள் எதிர்த்த
போது "கத்தி படத்தை எதிர்க்க முடியாது" என்று வெளிப்படையாக கூறியவர் சீமான். கடைசியாக ஐ.நாவின் டப்லின் தீர்ப்பாயத்தில் "விடுதலைபுலிகள் தான் தமிழர்களை கொன்றனர்" என்று ஒப்புதல் வாக்குமூலம்கொடுத்துள்ளார் சீமான். ஈழ போர் தோல்வியில் முடிந்ததும் நாடு கடந்த தமிழ் ஈழ அரசை அமைக்க முயன்றார்கள் வெளிநாடு வாழ் தமிழர்கள். ஒரு காலத்தில் நாடு இல்லாத யூதர்கள் இது போன்ற அரசை அமைத்து பிறகு இஸ்ரேல் என்ற நாட்டை பெற்றனர். இதனால் அதிர்ச்சியடைந்த சிங்கள அரசு தமிழர்களின் ஒற்றுமையை சிதைக்க முடிவு செய்தது. சீமானுக்கு எங்கிருந்தோ பணம் வந்து குவிந்தது.அதனால் தான் பல வருடம் அரசியலில் இருந்த பாமாகவுக்கு இணையாக புதிதாக கட்சி தொடங்கிய சீமானும் சென்ற தேர்தலில் டிவிகளில் "போட்டு பார் ஓட்டை, அப்புறம் பார் நாட்டை" என்று  பிரமாண்டமாக விளம்பரம் செய்தார்.உலகம் முழுக்க தமிழர்கள் வாழ்ந்த இடத்தில் இருந்த தமிழ் அமைப்புகளில் பிளவுகள் ஏற்பட்டது. நாம் தமிழர் கட்சியின் கிளை அமைப்புகள் அங்கு தொடங்கப்பட்டன. அதன் பிறகு இன்று வரை உண்மையான நாடு கடந்த தமிழ் ஈழ அரசு அமையவில்லை

சீமானும் தமிழ்நாடும்:
                                     சரி இப்போது தமிழ்நாட்டு அரசியலுக்கு வருவோம். சீமான்  
தமிழ்நாட்டில் இயற்கை வளங்கள் சுரண்டப்படுவதாக கொந்தளிக்கிறார். ஆனால் அதை செய்யக்கூடிய மணற்கொள்ளையன் வைகுண்டராஜனும், கிராணைட் கொள்ளையன் பி.ஆர்.பியும் சீமானுக்கு நெருக்கமானவர்கள் என்று அவரின் தம்பிகள் எத்தனை பேருக்கு தெரியும்? சீமானுக்கு திருமணம் முடிந்த உடன் வைகுண்டராஜன் தான் தடபுடலாக கறி விருந்து கொடுத்தார். பதிலுக்கு வைகுண்டராஜன் மகன் திருமணத்தை சீமான் தான் முன்னின்று நடத்தி வைத்தார். நோட்டாவை விட குறைவான வாக்குகள் வாங்கிய "நாம் தமிழர்" கட்சிக்கு வைகுண்டராஜனின் நியூஸ் 7 தொலைக்காட்சியில் அளவுக்கு அதிகமாக முக்கியதுவம் கொடுக்கப்படுகிறது.சீமானட வைகுண்டராஜனின் பினாமி என்று கூறப்படும் குற்றச்சாட்டை இது உறுதிபடுத்துவது போல் உள்ளது.பி.ஆர்.பியில் தொழிலாளர் பிரச்சனை வந்த போது பி.ஆர்.பிக்கு ஆதரவாக "பி.ஆர்.பியிடம் வாங்கித் தின்றுவிட்டு அவரையே குற்றவாளியாக்குவது நியாயமா?" என்று பேசியதும் சீமான் தான். இவர்தான் ஆட்சிக்கு வந்து இயற்கை வளங்களை காக்க வைகுண்டராஜனையும், பி.ஆர்,பியையும் கைது செய்ய போவதாக கூறுகிறார். அடுத்து கல்வியை அரசுடைமை ஆக்கப்போவதாக சீமான் கூறுகிறார். ஆனால் தமிழ்நாட்டிலேயே மிகப் பெரிய கல்வி கொள்ளையனான சிறை சென்ற பாரிவேந்தர் பச்சமுத்து தான் 2016 தேர்தலுக்கு நாம் தமிழர் கட்சிக்கு 50 லட்சம் ருபாய் நன்கொடை கொடுத்துள்ளார். பச்சமுத்துவிடம் பணம் வாங்கி கொண்டே அவருக்கு எதிராக எப்படி நடவடிக்கை எடுப்பார்? இன்று அதிமுகவுக்கு எதிராக பொங்கும் சீமான் "சசிகலாவின் கணவர் நடராஜனின் காலில் விழுந்தவர்" என்பது தான் உண்மை
                                   வைகுண்டராஜன் சீமானுக்கு விருந்து வைத்ததை கம்யுனிஸ்டுகளின் இணையதளமாகிய வினவில் கடுமையாக விமர்சித்தார்கள். அதற்கான இணைப்பு கீழே
http://www.vinavu.com/2013/10/25/seeman-natarajan-vaikudarajan-tamil-desiam/

                                சரி எந்த பதவியிலுமே இல்லாத சீமானுக்கு தொழில் அதிபர்கள் ஏன் பணம் தருகிறார்கள்? தொழில் அதிபர்கள் பதவியில்  இருப்பவர்களுக்கு மட்டும் தான் பணம் கொ டுப்பார்கள் என்று நினைக்க வேண்டாம்.  அவர்களுக்கு பினாமியாக இருந்தால் பணத்தை வாரி வழங்குவார்கள். சுப்பிரமணியசாமி, உத்தரபிரதேசத்தின் அமர்சிங்
மாதிரி. மேலும் சீமானின் வெளிநாட்டு தொடர்புகள் கருப்புபணத்தை  வெள்ளையாக மாற்ற அவர்களுக்கு மிகவும் உதவும். தாது மணல் திருடன் வைகுண்டராஜன ஏன் சீமானுக்கு கறி விருந்து கொடுக்க வேண்டும். அவரின் நியூஸ் 7 தொலைக்காட்சியில் ஒரு வார்டு மெம்பராக கூட இல்லாத உங்க கட்சிக்கு ஏன் அளவுக்கு அதிகமான முக்கியதுவம் தரப்படுகிறது. கிரானைட் கொள்ளையன் பிஆர்பி ஆலையில் தொழிலாளர் போராட்டம் நடத்தினால் சீமானுக்கு ஏன் அவர்களை திட்டுகிறார்? இந்த கேள்விகளுக்கு பதில் தேடினாலே சீமானுக்கும் கொள்ளையர்களுக்கும் உள்ள தொடர்பு புரிந்துவிடும் 

சீமானும் விவசாயமும்:
விவசாயத்தை காப்பாற்ற போவதாக சீமான் மேடைகளில் உணர்ச்சி வசப்பட்டு முழங்குகிறார்.
ஆனால் விவசாய நிலங்களை பிளாட்களாக மாற்ற நீதிமன்றம் தடை விதித்தது. இந்த தடைக்கு எதிராக 19.10.2016 அன்று சென்னை எலும்பூரில் ரியல் எஸ்டேட் தரகர்களுடன் இணைந்து போராட்டம் நடத்தினார் சீமான். இந்த போராட்டத்தை தலைமேயேற்று நடத்தியர் "இந்தியதேசிய ரியல் எஸ்டேட் பில்டர்ஸ், லேண்ட் டெவலப்பர்ஸ்" சங்க தலைவரான விருகை வி.என்.கண்ணன்சீமான் ஏன் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளார் என்றால்,"ரியல் எஸ்டேட் தரகர்கள் தான் கட்சிக்கு நிதி கொடுப்பார்கள், விவசாயிகள் பெரிதாக நிதி கொடுக்க மாட்டார்கள்".  இப்போது இயற்கை விவசாயம் பற்றி பேசும் சீமான் ஒருவேளை ஆட்சிக்கு வந்தால் வெளிநாட்டு உர கம்பெனிகளிடம் காசு வாங்கி கொண்டு
அவர்களுக்கு சாதகமாக நடக்க மாட்டாரா? ஏனெனில் அவர்கள் ரியல் எஸ்டேட் அதிபர்களை விட பல நூறு மடங்கு அதிகமாக உர கம்பெனிகள் பணம் தருவார்கள். சீமான் ரியல் எஸ்டேட் தரகர்களுடன் இணைந்து போரட்டம் நடத்தியதற்கான ஆதாரம்(இது சீமானின் பேஸ்புக் பக்கத்திலிருந்து எடுக்கப்பட்டது)
https://m.facebook.com/ArasiyalNaiyaandi/photos/a.618198474956133.1073741828.592382070871107/1019537271488916/?type=3&comment_id=1019598791482764&_rdr#1019598791482764

சீமானும் ஜல்லிகட்டும்:
          கட்சி சார்பில்லாமல் மாணவர்கள் மதுரையில் ஜல்லிகட்டுக்காக நடத்திய பிரமாண்ட போராட்டத்தில் சீமானின் ஆதரவாளர்கள் சீமானின் படத்தை வைக்க முயன்றுள்ளனர். ஆனால் மாணவர்கள் இதை அனுமதிக்கவில்லை. ஏனெனில் இதை அனுமதித்திருந்தால் என்னமோ அந்த பிரமாண்ட போராட்டமே சீமானால் தான் நடத்தப்பட்டது போன்ற பொய்யான தோற்றத்தை சீமானின் ஆதரவாளர்கள் உருவாக்கியிருப்பார்கள். இதனால் சீமான் போராட்ட களத்திற்குள்  வந்த போது அவருக்கு மாணவர்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்தனர். தண்ணீர் பாட்டிலை சீமான் மீது வீசி அவரை விரட்டி அடித்தனர். இதனால் கோபம் அடைந்த சீமான் எப்படியாவது இந்த போராட்டத்தை பிசுபிசுக்க செய்ய வேண்டும் என்ற  வெறியில் மதுரையில் தனியாக ‌பாேட்டி  போராட்டம் நடத்தினார். தமிழர்கள் அனைவரும் கட்சி சார்பின்றி ஜாதி, மத பேதங்களை கடந்து ஒரு நல்ல நோக்கத்திற்காக போராடுவதே அபூர்வம். அதிலும் அரசியல் லாபம் அடைய பார்ப்பது நியாயமா சீமான்? இதுபற்றி வந்துள்ள பத்திரிக்கை செய்தி
www.dailythanthi.com/News/Districts/2017/01/19044613/The-students-refused-to-allowIn-Madurai--Seeman-who.vpf 

சீமான் ஒரு தமிழனா?:
சேக்ஸ்பியரின் பன்னிரண்டாம் இரவு (Twelfth Night) என்ற நாடகத்தில் செபஸ்டியன் என்ற ஒரு பாத்திரம் வரும். செபஸ்டியன், வயோலா என்ற இருவரும்ர இட்டையர்கள் என்று சேக்ஸ்பியர் சித்தரித்து இருப்பார். செபஸ்டியன் என்ற பெயர் லத்தீன் மொழிப்பெயர் ஆகும். மலையாள கிறிஸ்துவர்களிடம் மிகப் பெருமளவில் புலங்கும் பெயர் செபஸ்டியன் ஆகும். சேஷாத்ரி, தோத்தாத்ரி என்ற பெயர்களைக் கேட்டவுடனே பிராமணர்கள் என்று நாம்
அடையாளம் காண முடிவது போல, செபஸ்டியன் என்ற பெயரைக் கேட்டவுடன், இது மலையாள கிருத்துவக் குடும்ப பெயர் என்று விவரம் அறிந்தவர்களால் எளிதில் உணர முடியும். இதுதான் சீமானின் அப்பாவின் பெயர். தன்னை யாரும் செபாஸ்டின் சீமான் என்று சொல்லிவிடக்கூடாது என்பதற்காக தான் 2014ல் அரசாங்க பதிவேட்டில் தனது பெயரை செந்தமிழன் சீமான் என்று மாற்றி விட்டார்.
                                      சீமான் அவர்கள் ஒரு மலையாள கிறிஸ்துவரே. தமிழ் சமூகத்தை சார்ந்தவர் என்ற சாதி சான்றிதழை அவர் வாங்கி வைத்திருக்க கூடும். அதை மறுப்பதற்கில்லை. காசு வாங்கி  கொண்டு குடியரசு தலைவருக்கே கைது வாரண்ட் கொடுக்கும் ஒரு நாட்டில் இது ஒன்றும் பெரிய விசயம் இல்லை. ஒருவேளை சீமான் உண்மையிலேயே தமிழன் என்றால் "இந்த
குற்றச்சாட்டு எழுந்த உடனேயே பொங்கி இருப்பார். இல்லையெனில் தகுந்த ஆதரத்தோடு அதை மறுத்து இருப்பார்". ஏனெனில் இது அவரின் மண்ணின் மைந்தர் கொள்கையையே கேள்விகுறி ஆக்ககூடிய மிகக் கடுமையான குற்றாச்சாட்டு. எங்கே சீமானின் பத்தாம் வகுப்பு மார்க் சீட்டை வெளியிட சொல்லுங்கள் பார்ப்போம்/ நிச்சயமாக வெளியிட மாட்டார். ஏனென்றால் அதில் அவருடைய அப்பாவின் உண்மையான பெயர் தான் இருக்கும்.  இந்த விசயத்தில் சீமானின் கள்ள மௌனம் இதை மேலும் உறுதிப்படுத்துகிறது
சீமானின் கொள்கைகள்:
                                          *சீமானின் தேர்தல் அறிக்கையில் இருப்பவை அனைத்தும் ஏற்கனவேமுகநூல் பகிர்வுகளாக வந்தவைதான்.  இதுவரை வந்த முகநூல் போஸ்ட்கள், வாட்ஸ்ஆப் பார்வேர்டு செய்திகள் எல்லாம் ஒன்று விடாமல் படிப்பவர் என்றால் இந்த அறிக்கையைப் படிக்க வேண்டியதில்லை. *விவசாயத்தை அரசு வேலை ஆக்குவேன். ஆடு, மாடு மேய்தலும் அரசு வேலையாக ஆக்கப்படும்" என்கிறார். இது எல்லாம் ஏற்கனவே கம்யூனிஸ ரஷ்யாவில் முயற்சி செய்து அந்த நாடே திவால் ஆகி ரஷ்யாவே உடைந்து சிதறிவிட்டது. இது நடைமுறை சாத்தியமற்றதது. அதனால் தான் பாமக ஜாதி கட்சி என்றகெட்ட பெயர் இருந்தாலும் அதன் தேர்தல் அறிக்கையை பத்ரி சேஸாத்ரி போன்ற பொருளாதார அறிஞர்கள் பாராட்டினர். திமுக,அதிமுக போன்ற பெரிய கட்சிகள் கூட பாமகவின் தேர்தல் அறிக்கையை காப்பி அடித்தனர். ஏனெனில் பாமகவின் தேர்தல் அறிக்கை நடைமுறை சாத்தியமுடையது
                                            சீமானின் இன்னொரு வாக்குறுதி என்னவென்றால் ”தமிழ்நாட்டுக்கு தனியாக ராணுவத்தை கட்டமைப்பேன்” என்று கூறுகிறார். இந்தியாவில் இது சாத்தியம் இல்லையென்று கலவி அறிவு இல்லாதவர்கள் கூட கூறிவிடுவார்கள். இவரின் அனைத்து தேர்தல் வாக்குறிதிகளும் கிட்டதட்ட இதே மாதிரி தான். 

சீமானின் ஆதரவாளர்கள்:
                                                சீமானை ஆதரிப்பவர்கள் உணர்ச்சிவசப்படக்கூடிய தமிழ் மீது பற்று உடைய ஈழப் போரால் விரக்தி அடைந்த, திராவிட கட்சிகளின் ஊழலால்வெறுப்படைந்த அப்பாவி இளைஞர்கள் தான். அவர்களிடம் பொறுமையாக சீமானை பற்றிய உண்மைகளை விளக்கி கூறினால் முதலில் அதிர்ச்சி அடைகிறார்கள். பிறகு சுதாரித்து அவர்கள் கேட்கும் முதல் கேள்வி "சரி தமிழர்களுக்காக போரடக்கூடிய வேறு நல்ல தலைவர்கள் யார்?" என்று கேட்கிறார்கள். அதாவது வேறு வழியில்லாமல் தான் அவர்கள் இவரை ஆதரிக்கிறார்கள். அவர்களிடம் ஒன்று கூற விரும்புகிறேன் "வேறு நல்ல தலைவர்கள் இல்லை என்பதற்காக, வெறும் பேச்சை மட்டும் பார்த்து . ஊழல்வாதிகளுக்கு பதிலாக துரோகிகளை தேர்ந்தெடுக்க கூடாது" கருணாநிதி ஆவேசமாக பேசி பேசி தான் நம்மை எமாற்றினார். புலிகளின் ரகசியத்தை ராஜபக்சேவிடம் கூறிய பிரபாகரனின் முன்னாள் தளபதி கருணாவிற்கும், புலிகளுக்கு எதிராக ஐ.நாவில் வாக்குமூலம் கொடுத்த சீமானுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை. கையில் அதிகாரம் வரும் முன்பே சீமான் மீது கற்பழிப்பு, நிதி மோசடி, நம்பிக்கை துரோகம் என்று பல்வேறு குற்றச்சாட்டுகள் உள்ளது. ஒருவேளை பதவிக்கு வந்தால்?
                                          தொண்டர்கள் எவ்வளவு நல்லவர்களாக இருந்தாலும், கட்சியின் கொள்கை எவ்வளவு உயர்ந்தது என்றாலும் தலைவர்கள் நல்லவர்கள் இல்லை என்றால் எல்லாம் வீண்தான். திமுக தொண்டர்கள் பலர் தமிழுக்காக மொழிப்போராட்டத்தில் உயிரையே கொடுத்தனர். ஆனால் கருணாநிதி அதன் தலைவர் ஆனதால் தான் திமுக இந்த நிலையை அடைந்துள்ளது.எல்லாவற்றுக்கும் மேலாக தமிழ் இனத்துக்காக தனது உயிரை மட்டுமின்றி தனது குடும்பத்தையே இழந்த தலைவர் பிரபாகரனுக்கு து‌ரோகம் செய்தவரை எப்படி தலைவராக ஏற்க முடியும்.

கடைசியாக சீமானுக்கு சில கேள்விகள்:
                                      1.சீமான் அவர்களே "ஒரு விதவை இலங்கை அகதி பெண்ணை நான் திருமணம் செய்யவில்லை என்றால் என்னை செருப்பால் அடியுங்கள்" என்று முழங்கிவந்தீர்கள். ஆனால் திடீரென்று நீங்களே எதிர்பாராத விதமாக முன்னாள் அமைச்சரின் வீட்டிலிருந்து நல்ல வசதியான வரன் வந்ததும்(அந்த பெண் உங்களை விட 23 வருடம் வயதில் சிறியவராக இருந்தும்) அவரை திருமணம் செய்து கொண்டீர்கள். அந்த அமைச்சர் யார் தாெியுமா? "பிரபாகரனை கைது செய்து இந்தியா கொண்டு வர வேண்டும்" என்று தமிழக சட்டசபையில் தீர்மானம் கொண்டு வந்த காளிமுத்து தான் சீமானின் மாமா.இதுதான் ஈழ தமிழர்கள் மீது உங்களுக்கு உள்ளபாசமா?
                                         2.தலைவர் பிரபாகரனை சிறையல் அடைக்க வேண்டும் என்று சொன்ன ஜெயலலிதாவுக்காக நீங்கள் பிரச்சாரம் செய்தது ஈழ தமிழர்களின் நலனுக்காகவா? இல்லை நடிகை விஜயலட்சுமி (ப்ரண்ட்ஸ் படத்தில் சூரியாவுக்கு ஜோடி, விஜய்யின் தங்கை) உங்கள் மீது கொடுத்த கற்பழிப்பு புகாரில் இருந்து தப்பிக்கவா? (தைரியமாக புகார் கொடுத்தது ஒரு பெண் தான். புகார் கொடுக்காமல் மனதுக்குள் புழுங்கி கொண்டு இருப்பது எத்தனை விஜயலட்சுமிகள் என்று சீமானுக்கு நெருக்கமானவர்களுக்கு மட்டுமே தெரியும்)
                                       3. சீமானே ஈழ தமிழர்களை பற்றி பேசுவது அவர்களின் நலனுக்கா? இல்லை உங்களின் நலனுக்கா? இதை ஏன் கேட்கிறேன் என்றால் 'நீங்கள் அரணையூரில் கட்டி காெண்டு இருக்கும் பங்களா வீடு, உங்களின் ஆடம்பர திருமணம், வெளிநாட்டு சுற்று பயணங்கள் ' எல்லாம் எப்படி சாத்தியமானது? நீங்கள் எடுத்த இரண்டு, மூன்று மொக்கை படங்களில் சம்பாரித்ததா? 'இதெல்லாம் ஈழ தமிழர்களிடம் இருந்து அவர்களுக்காக
போராடுவதாக கூறி ஏமாற்றி வசூல் செய்யப்பட்ட பணம் இல்லையென்று' தலைவர் மீது ஆணையிட்டு கூற முடியுமா உங்களால்?
                                         4.நாம் தமி‌ழர் நண்பர்களுக்கு கற்பழிப்பு புகாரில் சிக்கியரை, ஈழ விதவை பெண்ணை  திருமணம் செய்வேன் என்று வாக்கு கொடுத்து ஏமாற்றிவிட்டு பணத்துக்காக வேறு திருமணம் செய்தவரை, ஐ.நா விசாரணை குழுவில் “விடுதலைப் புலிகள்தான் தமிழர்களை
சுட்டு கொன்றனர்” என்று வாக்குமூலம் கொடுத்தவரை’ போய் கர்ம வீரர் காமராஜர் மற்றும் தலைவர் பிரபாகரனின் வாரிசாக நீங்கள் முன்  வைத்தால், அதை அவர்களின் ஆன்மாவே மன்னிக்காது. சிறிது யோசியுங்கள்
                                       நாம் தமிழர் கட்சி நண்பர்களே சதுரங்கவேட்டை படத்தில் ஒரு வசனம் வரும் "பாதி உண்மையோடு பாதி பொய்யையும் கலந்து சொன்னால் யாராலும் கண்டுபிடிக்க
முடியாது"என்று. இந்த உத்தியை பயன்படுத்தி  மேடையில் உணர்ச்சி பொங்க பேசி
தான் சீமான் உங்களை மூளைசலவை செய்துள்ளார். நான் உங்களுக்கு சவால்
விடுகிறேன். இந்த கட்டுரையை உங்களுக்கு தெரிந்த "நாம் தமிழர்" கட்சி நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள். அதில் ஒருவராவது அறிவிப்பூர்வமாக ஆதாரத்துடன் பதில் சொல்லி விட்டால் நான் இந்த பிளாக்கையே அழித்துவிடுகிறேன். இந்த கட்டுரையை நான் பகிர்வதற்கு காரணம் இதனால் என்னை போன்ற அப்பாவி இளைஞன் ஒருவனாவது சீமானிடமிருந்து தப்பித்தால் எனக்கு மகிழ்ச்சி தான்

சிறு விளக்கம்:
                         மேலே உள்ள எனது கட்டுரைக்கு பதிலாக ஆதாரமே இல்லாமல் ஏகப்பட்ட பொய்களை கொண்டு ஒரு கட்டுரையை எழுதி சீமானின் கட்சியினர் பரப்பி வருகிறார்கள். அவர்கள் எழுதிய அந்த கட்டுரைக்கு நான் எழுதிய பதில் கட்டுரை
http://faithfulltamailan.blogspot.in/2017/03/blog-post.html